ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு 210 வீட்டுத் திட்டம் ஆரம்பம்

யாழ்.மாவட்டத்தில் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு 210 வீட்டுத் திட்டம் என்ற 5 வருட வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலக விவசாய பிரிவு தெரிவித்துள்ளது.

விவசாயப் பிரிவு, சமுர்த்தி பிரிவு ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டதை முன்னெடுத்துள்ளன. தொடர்ச்சியாக 5 வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 8 வகையான மரக்கறி வகைகளுக்கான விதைகள் மற்றும் நாற்றுகள் கிராம மட்டத்தில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் இரண்டு தென்னங்கன்றுகள் ஒரு பழமரக்கன்று கோழிக்குஞ்சுகள் ஆகியன வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் குறூப் நிருபர்

Thu, 12/17/2020 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை