2021 இல் பாடசாலைகள் ஆரம்பமாகலாம் திகதி குறித்து இவ்வாரம் அறிவிப்பு

சுகாதார தரப்பு பரிந்துரைகளுக்கு அமைய திறப்பு   

2021ம் ஆண்டில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை தொடங்குவதற்கான திகதி குறித்து எதிர்வரும் வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை தெரிவிக்கும் பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களின்படி பாடசாலைகள் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு பாடசாலைகள் தொடங்குவது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சர் உடனான சிறப்பு சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இதனிடையே, மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசம்பர் 24 ஆம் திகதி தொடங்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார். 10,165 பாடசாலைகளில் 5,100 பேர் மட்டுமே மூன்றாம் தவணையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Mon, 12/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை