20 CID யினருக்கு தொற்று; கைதிகள் கொத்தணி 2,175

குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் 20 சி.ஐ.டி உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2,100 ஐக் கடந்துள்ள நிலையில் நேற்றும் வீரவில சிறைச்சாலையில் 74 கைதிகளுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. அதேவேளை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 27 பேரும் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அவர்கள் வத்தளை பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வேறு சிறைச்சாலைகளிலிருந்து வீரவில சிறைச் சாலைகளுக்கு தனிமைப்படுத்தலுக்காக கொண்டுவரப்பட்ட கைதிகளுக்கே வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சிறைச்சாலையின் அதிகாரி தெரிவித்தார்.

அதனையடுத்து அந்த சிறைச்சாலையை அண்டிய பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 12/08/2020 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை