கொவிட்–19: அதிக உயிரிழப்பு பிராந்தியமானது ஐரோப்பா

உலகில் கொவிட்–19 நோயால் மிக அதிகமான மரணங்கள் நேர்ந்துள்ள பிராந்தியமாக ஐரோப்பா உருவெடுத்துள்ளது. அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியுள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்ட மரணங்கள் 5 நாடுகளில் பதிவாகின.

நோய்ப்பரவலால் அதிக பாதிப்படைந்த முதல் மேற்கத்திய நாடான இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் ஆகியவை அந்த 5 நாடுகளாகும்.

ஐரோப்பாவில் புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்களின் தினசரி எண்ணிக்கையும் மிக அதிகமாகப் பதிவாகி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பதிவான புதிய சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை, 240,000க்கும் அதிகம்.

அது உலகம் முழுவதும் பதிவான சம்பவங்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதி. இந்நிலையில் மொடர்னா தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு அவசர அனுமதி வழங்குவது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு முன்கூட்டியே முடிவெடுக்கவுள்ளது.

அடுத்த மாதம் 6ஆம் திகதி அது பற்றி முடிவெடுக்கப்படும்.  

Sat, 12/19/2020 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை