16 வயது சுனாமி பேபி அபிலாஷ் மறைந்த உறவுகளுக்கு அஞ்சலி

சுனாமி தாக்கத்தினால் காணாமல் போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபியில் நேற்று முன்தினம் பெற்றோர் உறவினர்களுடன் இணைந்து சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி செலுத்தினார்.

தற்போது அந்த அபிலாஷிக்கு 16 வயதாகிறது.சுனாமி தாக்கத்தின் 16 ஆவது அண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

சுனாமியில் கிழக்கு மாகாணமே மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமியால் காணாமல் போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தை ஒன்றுக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.

அபிலாஷை அப்போதிருந்து சுனாமி பேபி என்றே அழைக்கப்பட்டு வரப்படுகின்றது.

பின்னர் மரபணு பரிசோதனை மூலம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தைச் சேர்ந்த ஜெயராசா தம்பதியினரது என உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mon, 12/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை