கிராம உத்தியோகத்தர் மர்மமாக உயிரிழப்பு

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான  பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைக்கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ். விஜியேந்திரன் (55)  என்பவர்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக, இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (03) இடம்பெற்றுள்ளது.

இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது கள்ளியடி, ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயங்கள் காணப்படுவதோடு,  அவர் இனந்தெரியாத நபர்களினால் கூரிய ஆயுதத்தினால்  தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த கிராம அலுவலகர் பள்ளமடு வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உயிரிழந்துள்ளதாக, இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் மரணம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக இவர் குரல் கொடுத்து வந்துள்ளமையும் தெரியவருகின்றது.

தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Wed, 11/04/2020 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை