அடுத்த வாரம் முதல் நாட்டுக்கு மீளஅழைத்து வர நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியழைக்கும் நடவடிக்கைகள் மீள அடுத்த வாரம் முதல் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களை கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்ட அவர் அதற்கிணங்க முதற்கட்டமாக மத்திய கிழக்கு உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்களே அழைத்து வரப்பட உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அதற்கான விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் இடம்பெற்ற போதும் நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஆரம்பித்த நிலையில் அதனை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை