பரிஸ் மாஸ்டர்ஸ்: வவ்ரிங்கா- ருபெல்வ் மூன்றாவது சுற்றுக்கு தகுதி

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டிகளில், ஸ்டென் வவ்ரிங்கா மற்றும் ஹென்ரி ருபெல்வ் ஆகியோர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் ஸ்டென் வவ்ரிங்கா, அமெரிக்காவின் டொமி போலை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்டென் வவ்ரிங்கா, 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ரஷ்யாவின் ஹென்ரி ருபெல்வ், மோல்டோவாவின் ராடு அல்போட்டுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் ஹென்ரி ருபெல்வ், எளிதாக வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை