ரெபிட் என்டிஜன் பரிசோதனை தனியாருக்கு அனுமதி இல்லை

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தனியார் இரசாயன கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க இரசாயன கூடங்களுக்கு மாத்திரமே அதற்கான அனுமதி வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நேற்றைய தினம் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில பிரதேசங்கள் நேற்று முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கண்டி -அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவில் புலுஹாதென்ன மற்றும் தெலும்புகஹவத்த ஆகிய கிராம சேவை அதிகாரி பிரிவுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதுடன் பண்டாரகம பொலிஸ் நிர்வாக பிரதேசத்திற்கு உட்பட்ட அட்டுலுகம கிழக்கு எப்பிடமுல்ல, கோலமெதிரிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. (ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 11/27/2020 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை