ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறிய கிறிஸ் கெய்லுக்கு அபராதம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியதற்காக கிறிஸ் கெய்லுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைவதற்கு முன்பு, 99 ஓட்டங்கள் எடுத்த கெய்ல், ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்த பின்னர் சதத்தை தவறவிட்ட விரக்தியில் தனது துடுப்பாட்ட மட்டையை வீசினார்.

இது ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறும் சம்பவமாகும். இதனை அவர் குற்றமென ஒப்புக்கொண்டார். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கெய்ல், 63 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 99 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.

Mon, 11/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை