டாக்டர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று

களுபோவில வைத்தியசாலையில் அனர்த்தம்

களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவர் மற்றும் தாதி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

சிறுவர் வார்ட்டில் கடமையாற்றியவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாவர்.

குறித்த வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஒன்றும் அவருடைய தாயும் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட PCR  பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த மூவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இருப்பினும் இதனால் வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

Mon, 11/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை