தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலானது வெட்கக்கேடானது

- முன்னாள் எம்.பி திலகராஜ் கண்டன அறிக்கை​

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளமையானது,  வெட்கக் கேடான விடயமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே,இவ்வாறு  குறிப்பிட்டப்பட்டுள்ளது,...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு,  ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டிய நபர்கள், ஆளும் தரப்புடன் இணைந்து, இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்ககுமாறு கோரி,  ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கோரிக்கை மனுவில்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளமையானது, ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக திலகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள நிலையிலேயே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

20 ஐ நிறைவேற்றுவதன் மூலம் சர்வாதிகாரப் போக்கு ஏற்படும் என, கோஷம் எழுப்பிய நபர்களே, தற்போது ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மனிதாபிமான அடிப்படையிலேயே, தாம் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் முன்வைக்கப்படுகின்ற இவ்வாறான காரணங்கள்,  சிறுபிள்ளைத்தனமாகவே காணப்படுவதாக திலகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த கடிதத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட போதிலும், தான் கையெழுத்திடவில்லை என முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டார்.
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டனர்.

இதன்படி,  குறித்த கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்பில், துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தடண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கோரிக்கை மனுவில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 160 பேர்,  கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 11/01/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை