- 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு
தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக, கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தேனியா இதனைத் தெரிவித்தார்.
கண்டி நகரில் அலுவலகம் ஒன்றிற்கு அருகே மறைந்திருந்த நிலையில் இக்கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, அவர் மீண்டும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.
பழைய போகம்பறை சிறையிலிருந்து இன்று (18) அதிகாலை தப்பிக்க முயன்ற 5 கைதிகளில் ஒரு கைதி மரணமடைந்ததோடு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மற்றைய நபர் தப்பிச் சென்றிருந்தார்.
Wed, 11/18/2020 - 17:18
from tkn