மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் ஆதார மருத்துவமனையின் ஒரு பிரிவு கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இக்கொரோனா சிகிச்சை பிரிவானது, கொரோனா நோயாளர்களை பராமரிக்கக்கூடிய வகையில் இயங்கத் தொடங்கியுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ப. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

வடக்கில் நான்காவது கொரோனா மருத்துவமனையாக மாங்குளம் மருத்துவமனை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - முல்லைக்கீதன்)

Fri, 11/06/2020 - 11:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை