ரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் நேற்று காலமானார்

ஸ்ரீ லங்கா ரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபான பேமசிறி தேரர் காலமானார். இவர் தனது 98 ஆவது அகவையிலேயே இறையடி சேர்ந்துள்ளார்.

கண்டி பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அத்தோடு இவர், தனது வாழ்நாட்களை பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்துள்ளதுடன், அளப்பரிய சேவைகளையும் ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wed, 11/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை