பாணந்துறைக் கடலில் நேற்று முன்தினம் கரையொதுங்கிய திமிங்கில கூட்டத்தில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. இத்திமிங்கிலங்கள் குறிப்பாக குடும்பமாக இருப்பதுடன் அதில் ஒரு திமிங்கிலம் கரையொதுங்கினால் ஏனைய திமிங்கிலங்களும் அதனை பின்தொடருமென கடல்சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திமிங்கில கூட்டத்தை ஆழ்கடல் பகுதியில் விடுவிப்பதற்காக கடற்படை, விலங்கின அமைப்புகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நேற்று முன்தினம் இரவு முதல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பல மணிநேர மீட்பு முயற்சிகளுக்குப் பின்னர் நேற்றுக் காலை மூன்று திமிங்கில உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.
Wed, 11/04/2020 - 06:00
from tkn