காத்தான்குடியில் பலசரக்கு நிலையத்தில் நேற்று பாரிய தீ

பல கோடி ரூபா பொருட்கள் சாம்பராகின

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பலசரக்கு கடையொன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீப்பரவலினால் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. முகம்மட் நசார் என்பவருக்கு சொந்தமான இந்த பல சரக்கு கடையில் ஏற்பட்ட தீப் பரவலையடுத்து பொது மக்களும் பொலிசாரும் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தீப் பரவலினால் குறித்த பல சரக்கு கடை முற்றாக எரிந்துள்ளதுடன் அங்கிருந்த சாமான்களும் முற்றாக எரிந்துள்ளன.

இந்த கடைக்கு அருகிலுள்ள பெயிண்ட கடைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

Wed, 11/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை