புத்தளத்தில் அரிய வகை சருகு மான் கண்டுபிடிப்பு

புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வன ஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இது தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சருகு மானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். குறித்த சருகுமானை நிகவெரட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் புத்தளம் பிராந்திய அலுவலகத்துக்குப் பொறுப்பான உதவி அதிகாரி சஞ்சீவ வீரசேகர தெரிவித்துள்ளார்.

புத்தளம் தினகரன் நிருபர் 

Wed, 11/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை