அவசியம் ஏற்படின் விடுவிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் முடக்க நேரிடும்

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிப்பு

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களால் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து மத்திய மலைநாட்டுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு விடுத்த அறிவித்தலை மீறி சிலர் அந்த பகுதிகளுக்குச் சென்றமையினாலேயே மத்திய மாகாணத்தில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. மத்திய கிழக்கிலிலிருந்து மாத்திரமன்றி ஏனைய நாடுகளிலிருந்தும் இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் அழைத்து வரப்படுவார்கள் என்றார்.

இதே போன்று கொட்டாஞ்சேனையிலிருந்து சென்ற நபரொருவராலேயே நுவரெலியாவிலும் தொற்று இனங்காணப்பட்டது.

Thu, 11/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை