இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் இருவர் காயம்

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில், இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு (05) 8.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள மதுபானசாலையில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

இதன்போது, மதுபானசாலைக்கு முன்பாக வீதியில் மதுபான வெற்றுப் போத்தல்களும் உடைக்கப்பட்டிருந்தன. இதனால் வீதியில் சென்றவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் சேவைக்கு பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

Fri, 11/06/2020 - 16:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை