இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவோம்

ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய வாழ்த்து

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜோ பைடனுக்கு தனது ருவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில்,

வரலாற்று ரீதியிலான உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள். மேலும் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உங்களுடன் பணியாற்ற எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், 290  தொகுதிகளை கைப்பற்றி 46வது ஜனாதிபதியாகவும்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகவும் பதவியேற்கவுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கும் ஏனைய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை