இராணுவம் பயன்படுத்திய தனியாரது அதிசொகுசு பஸ் கோர விபத்து

கொழும்பு -கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இரவு சம்பவம்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை கொண்டு செல்ல இராணுவத்தினர் பயன்படுத்தும் தனியார் சொகுசு பஸ்ஸொன்று கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேகமாக பயணித்த இந்த பஸ்ஸானது வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே சாலையின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதியுள்ளது.

இந்த அனர்த்தம் நேற்று முன்தினம் இரவு (10) 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பஸ்ஸின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான பஸ் பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதுடன், விபத்தால் நெடுஞ்சாலைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Thu, 11/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை