இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்

ஐபில் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் டிரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

டுபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது.

சம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் வழங்கப்பட்ட விருதுகள்:

ஆட்ட நாயகன் விருது மும்பை அணியின் டிரெண்ட் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

கேம் சேஞ்சர் விருது - ரோகித் சர்மா

சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - இஷாந்த் கிஷண்

அதிக சிக்சருக்கான விருது - ரோகித் சர்மா

பவர் பிளேயர் விருது - போல்ட்

Thu, 11/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை