அடக்கம் செய்ய இடமளிப்பதை விரும்புகிறார் காணி அமைச்சர்

அனுராதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின்உடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதை தான் விரும்புவதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களுக்கும் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம் மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேவேளை நீதியமைச்சர்அலிசப்ரி அரசாங்கத்திடம்இது தொடர்பில்விடுத்துள்ள கோரிக்கை குறித்துஎதிர்ப்புகள்முன்வைக்கப்பட்டுவருகின்றன.

மேலும், கொரோனா வைரஸ் காரணமாக எவராவது இறக்கும் சந்தர்ப்பத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை விடுத்தால், அதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே முடிவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மேற்கு நிருபர்

Tue, 11/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை