வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியை நியமித்தார் பைடன்

தமது நீண்ட நாள் உதவியாளரான ரோன் கிளைன் என்பவரை, வெள்ளை மாளிகை பணியாளர் தலைமை அதிகாரியாக ஜோ பைடன் நியமித்துள்ளார்.

இந்த பணியில் ஜனாதிபதியின் செயல் அலுவலகத்தின்  மேற்பார்வை பொறுப்பை கவனிப்பதுடன் ஜனாதிபதியின் செனட் ஆலோசகராகவும் ரோன் கிளயின் செயல்படுவார்.

முக்கிய பிரச்சினைகளில் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கும் உதவக் கூடிய திறமையாளர்கள் குழுவையும் ரோன் கிளைன் ஏற்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 மற்றும் 2014 இல் ஏற்பட்ட பொருளாதார, சுகாதார நெருக்கடி காலக்கட்டங்களில் ரோன் கெயின் சிறப்பாக பணியாற்றியவர் என ஜோ பைடன், ரோன் கெயினை பாராட்டி உள்ளார்.

கிளைன் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் வெள்ளை மாளிகையில் மூத்த உதவியாளராகவும் துணை ஜனாதிபதி அல்கோரின் தலைமை அதிகாரியாகவும் இதற்கு முன் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை