தீபாவளி திருநாளை இல்லங்களில் இருந்தவாறே கொண்டாடவும்

சுகாதார வழிமுறைகளை பின்பற்றவும் பாபுசர்மா கோரிக்கை

கொரோனா நிலைமை காரணமாக இம்முறை இந்துக்கள் தீபாவளியை வீடுகளில் இருந்து பிரார்த்தனையோடு கொண்டாட வேண்டும் என சிவஸ்ரீ பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தின் சார்பில் மத கலாசார விவகார அலுவல்கள் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தீபாவளி நாளான இன்றைய தினம் ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ளாது, வீடுகளிலிருந்து தத்தமது குலதெய்வங்களை பிரார்த்தியுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமாகப் பரவி வரும் இவ்வேளையில் இந்துக்களாகிய நாம் இந்த முறை தீபாவளி திருநாளை மிகவும் அமைதியாகவும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியும் கொண்டாட வேண்டும். அத்துடன் வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரார்த்தனைகளை மேற்கொள்வதுடன் இந்த வைரஸ் விடுபட்டு ஆரோக்கியமான சுகாதார வாழ்வினை வாழ வேண்டுமெனவும் இந்துக்களாகிய நாம் பிரார்த்திக்க வேண்டும் எனவும் பாபு சர்மா குருக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்துக்கள் அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலம் அமைய எனது நல்வாழ்த்துக்கள்.

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை