பெண்களுக்கான ஐ.பி.எல்: ட்ரையல் பிளேஸர்ஸ் அணி சம்பியன்!

பெண்களுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ட்ரையல் பிளேஸர்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) மகுடத்திற்கான இறுதிப்போட்டியில், ட்ரையல் பிளேஸர்ஸ் அணியும் சுப்பர் நோவாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ட்ரையல் பிளேஸர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரையல் பிளேஸர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்மிர்த்தி மந்தனா 68 ஓட்டங்களையும், டோடின் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சுப்பர் நோவாஸ் அணியின் பந்துவீச்சில், ராதா யாதவ் 5 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் மற்றும் சிறிவர்தன ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு 119 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சுப்பர் நோவாஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் ட்ரையல் பிளேஸர்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்மன்பிரீத் கவுர் 30 ஓட்டங்களையும், சசிகலா சிறிவர்தன 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ட்ரையல் பிளேஸர்ஸ் அணியின் பந்துவீச்சில், சல்மா கதுன் 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், சோபி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகியாக ஸ்மிர்த்தி மந்தனாவும், தொடரின் நாயகியாக ராதா யாதவ்வும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை