கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த A/L பரீட்சை

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் திருப்தி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஐ.டி.எச் மருத்துவமனையிலும் சில தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் நேற்று நிறைவடைந்தன.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக 362, 824 பேர் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்திருந்ததுடன் 2, 648 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடாத்தப்பட்டன.

கொரோனா நோய் தொற்று அபாயத்திற்கு மத்தியிலும் வெற்றிகரமாக பரீட்சைகளை நடத்த முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

Sat, 11/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை