9000 பேருக்கு மேல் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 657 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக காணப்படுகின்றது.இதில் 4 ஆயிரத்து 712 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 419 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை