கல்முனை பிராந்தியத்தில் 8 ½ மணி நேர மின்வெட்டு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, நிந்தவூர், சாய்ந்தமருது உள்ளிட்ட  சில பகுதிகளில் நாளை மறுதினம் (18) காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடைப்படும்.

எதிர்வரும் 19ஆம் திகதி சாய்ந்தமருது, சாம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சாய்ந்தமருது, அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்களாவாடி, ஹிஜ்ராபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடைப்படும்.

எதிர்வரும் 21ஆம் திகதி கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட 12ஆம் கொலனி, மல்கம்பிட்டி வீதி, மலையடிக்கிராமம், கைகாட்டி, நைனாகாடு, சம்மாந்துறை, ஒலுவில், திராய்கேணி, நிந்தவூர் ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடைப்படும்.

எதிர்வரும் 23ஆம் திகதி நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை மற்றும் நிந்தவூர் ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடைப்படும்.

எதிர்வரும் 24ஆம் திகதி சாய்ந்தமருது, கல்முனை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பள்ளிவாயல் வீதி, காசிம் வீதி, அலியார் வீதி, கல்முனை நகரம், ரெஸ்ட் ஹவுஸ் வீதி ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடைப்படும்.

எதிர்வரும் 25ஆம் திகதி நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஒலுவில், திராய்க்கேணி, கடற்கரைப்பள்ளி வீதி, அம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடைப்படும்.

எதிர்வரும் 28ஆம் திகதி நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, நிந்தவூர், அம்பாறை வீதி, வங்களாவடி, காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி ஆகிய பகுதியில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடைப்படும்.

எதிர்வரும் 30ஆம் திகதி நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஒலுவில், திராய்க்கேணி, நிந்தவூர் ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஒலுவில் விசேட நிருபர் - எம்.எஸ்.எம். ஹனீபா)

Mon, 11/16/2020 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை