லிபிய கடலில் படகு மூழ்கி 74 பேர் பலி

லிபியா அருகே கடலில் படகு மூழ்கியதில் அதில் பயணித்த 74 அகதிகள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

ஐரோப்பா செல்ல 121 பயணிகள் படகில் சென்ற போது கடலில் எழுந்த பேரலைகளால் சுமை தாளாமல் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்தப் படகில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 74 பேரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் இரவு பகல் என மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர் . புதிதாக பிறந்த குழந்தை உட்பட இதுவரை 47 பேரை உயிருடன் மீட்டனர். அவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலமாக கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மத்தியதரைக் கடல் பகுதியில் இது போன்ற எட்டு படகு விபத்துகள் நேரிட்டன.

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை