திருக்கோவிலில் தனிமைப்படுத்தப்பட்ட 71 குடும்பங்களுக்கு உலருணவு விநியோகம்

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 71 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வெளிப் பிரதேசங்களில் தொழில் காரணமாக கொழும்பு, குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் என்ற அடிப்டையில் சுகாதார தரப்பினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 71 குடும்பங்களுக்கே உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரனின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ரமேஷ், கிராம சேவை உத்தியோகத்தர்களான ஏ. கந்தசாமி, என். சஞ்சிவநாத் மற்றும் உத்தியோகத்தர்களினால் உலர் உணவுப் பொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருக்கோவில், தம்பிலுவில், விநாயகபுரம், காயத்தி கிராமம், மண்டானை ஆகிய கிராமங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 71 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

(திருக்கோவில் தினகரன் நிருபர் - எஸ். கார்த்திகேசு)

Wed, 11/18/2020 - 13:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை