ஐபிஎல் தொடரில் 670 ஓட்டங்கள் குவித்த கேஎல் ராகுல் ஓரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார். ரபாடாவுக்கு ஊதா நிற தொப்பி கிடைத்துள்ளது.
ஐபிஎல் 13-வது பருவ தொடர் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.
தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் முடிவடைந்தன.
இந்த லீக் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் துடுப்பாட்ட வீரருக்கு ஓரஞ்ச் நிற தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு ஊதாநிற தொப்பியும் வழங்கப்படும்.
அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 670 ஓட்டங்கள் குவித்து ஓரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
17 போட்டிகளில் 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா ஊதா நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
மேலும் விருது பெற்றவர்கள்:
வளர்ந்து வரும் வீரர் (எமர்ஜிங் பிளேயர்) - தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி)
ஃபேர் பிளே விருது - ரோகித் சர்மா
(மும்பை)
கேம் சேஞ்சர் விருது - கேஎல் ராகுல் (பஞ்சாப்)
சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - பொல்லார்ட்
(மும்பை)
அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது - இஷான்
கிஷண் - (மும்பை- 30 சிக்சர்)
பவர் பிளேயர் விருது - டிரெண்ட் போல்ட்
(மும்பை)
மதிப்பு மிகுந்த வீரர் - ஜோப்ரா ஆர்ச்சர்
(ராஜஸ்தான்)
from tkn