65 மணி நேரத்தின் பின் 3 வயது குழந்தை மீட்பு

துருக்கியில் பூகம்பம் ஏற்பட்டு சுமார் மூன்று நாட்களில் இடிபாடுகளில் இருந்து 3 வயது பெண் குழந்தை ஒன்று நேற்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ஏகன் கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்மிர் நகரில் தரைமட்டமான எட்டு கட்டடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த கட்டடங்களில் இருந்த 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பூகம்பத்தில் கிரேக்க தீவான சாமோசில் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பூகம்பம் தாக்கி 65 மணி நேரத்திற்குப் பின்னர் எலிப் என்ற குழந்தை இடிபாடுகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு மீட்புப் பணியாளர்களால் எடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

எலிபின் இரு சகோதரிகள் மற்றும் சகோதரர் அவளது தாயுடன் கடந்த கடந்த சனிக்கிழமை காப்பற்றப்பட்டனர். இதில் ஒரு குழந்தை பின்னர் உயிரிழந்தது.

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை