வெளிநாடுகளிலிருந்து மேலும் 488பேர் வருகை

கொரோனா தொற்று காரணமாக நாட்டிற்கு வர முடியாமால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 488 இலங்கையர்கள் நேற்று முன்தினம் (28) நாடு திரும்பியுள்ளனர்.

டுபாயில் இருந்து 78 பேரும் கட்டாரில் இருந்து 45 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 292 பேரும் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மாலைதீவில் இருந்து 69 பேர் மற்றும் அவுஸ்திரேவியாவில் இருந்து 4 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mon, 11/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை