48 மணி நேரத்துக்குள் அழைத்துவர உத்தரவு

கொரோனா சிறப்பு பணிக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு

சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய நடைபெற்ற சிறப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணு தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலினால், சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்கள் வதிவிட மற்றும் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதுடன், பல்வேறு இன்னல்களுக்கும் முகங்கொடுத்துள்ளனர்.

அந்நாட்டின் 150 பாதுகாப்பு இல்லங்களில் இவர்கள் தங்கியுள்ளனர். இவர்களை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதற்கமைய ஒரு நாளைக்கு இரண்டு விமான சேவைகளையேனும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வைரஸினால் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவர்களை ஒரு நாளைக்குள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பும் செயற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

 

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை