எத்தியோப்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள டைக்ரே யுத்த வலயத்தில் சிக்கிய 38 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர்கள் எத்தியோப்பியாவில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணி புரியும் நபர்களாவர்.
ஐக்கிய நாடுகள் சபையின் எத்தியோப்பியன் அலுவலகத்துடன் வெளி விவகார அமைச்சு மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாக இக்குழுவினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையில் அவர்களுடன் மேலும் பல வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
Fri, 11/27/2020 - 11:14
from tkn