- 31 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2,950 பேர்
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 31 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2,950 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இன்று (15) அதிகாலை வரை, கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாளர்கள் சுமார் 30,000 பேர் சுயதனிமைப்படுதப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றையதினம் (14) இலங்கையில் 13,671 PCR பரிசோதனைகள் மேறகொள்ளப்பட்டுள்ளது.
Sun, 11/15/2020 - 21:34
from tkn