- நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்
இலங்கையில் 30ஆவது கொரோனா தொடர்பான மரணம் பதிவாகியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனை அறிவித்துள்ளார்.
நேற்று (05) மரணமடைந்த இந்நபர், அங்கொடை தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IDH) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கொழும்பு 15, மோதறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும், அந்நோயின் சிக்கல் நிலை மற்றும் கொவிட்-19 நோயின் தாக்கம் ஆகியன காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Fri, 11/06/2020 - 23:52
from tkn