நுரைச்சோலை, பூலாச்சேனை விவசாய நிலத்தில் பீட்ரூட் அறுவடையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் அரவம் தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீரங்கம் மகேஸ்வரி (50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரின் மரண விசாரணைகள் புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரனை அதிகாரி பீ.எம்.ஹிசாம் முன்னிலையில் இடம்பெற்றது.
இவரை தீண்டியதாக கருதப்படும் அரவம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இனங்காணப்படாத அரவம் தீண்டியதால் ஏற்பட்ட மரணம் என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பினை வழங்கி சடலத்தினை அவரது கணவரிடம் ஒப்படைத்தார்.
குறித்த பிரதேசத்தில் கடந்த ஆறு நாட்களாக பாம்புகள் காணப்படுவதாகவும் ஒரு சிலவற்றை கொன்றுள்ளதாகவும் மரண விசாரணையின்போது, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
மழைக் காலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிக அவதானத்தோடு செயற்பட வேண்டும் என, மரண விசாரனை அதிகாரி பீ.எம். ஹிசாம் இதன்போது அறிவுரை வழங்கினார்.
(புத்தளம் தினகரன் நிருபர் - முஹமட் சனூன்)
from tkn