வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், 22 பெண் கைதிகள் மற்றும் ஒரு ஆண் கைதிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 23 பேரையும், வெலிக்கந்தை கொவிட்-19 வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (05) ஒரு சிறைச்சாலை அதிகாரி மற்றும் 4 பெண் கைதிகள், 2 ஆண் கைதிகள் ஆகிய 7 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Fri, 11/06/2020 - 20:24
from tkn