யாழில் சீரற்ற காலநிலையால் 22 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

கடந்த 15ஆம் திகதியிலிருந்து இன்றையதினம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில்  காணப்பட்ட  காற்றுடன் கூடியதான மழை தாக்கத்தின் காரணமாக மேற்படி குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன்,  16  வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

நல்லூர், கோப்பாய், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், கரவெட்டி  பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  பாதிப்புகள் தொடர்பான  விவரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
 

Wed, 11/18/2020 - 18:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை