தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளில் ஹட்டன் கல்வி வலயத்தில் அதிக கஷ்ட பிரதேசங்களைச் சேர்ந்த தோட்டப்பாடசாலைகளை சேர்ந்த இரண்டு மாணவர்கள் 196 அதிகூடிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மஸ்கெலியா மொக்கா டிசைட் பாடசாலையைச் சேர்ந்த மதியழகன் சாயிதரன் என்ற மாணவன் 196 புள்ளிகளையும் மஸ்கெலியா அப்புகஸ்தென்ன வித்தியாலயத்தில் நந்தகுமார் நவீசனா என்ற மாணவி 196 புள்ளிகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினை பெற்றுள்ளனர்.
டிசைட் பாடசாலையிலிருந்து மேலும் ஒரு மாணவரும் அப்புக்கஸ்தென்ன பாடசாலையில் மேலும் மூன்று மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.
ஹட்டன் விசேட நிருபர் சுந்தரலிங்கம்
Tue, 11/17/2020 - 06:00
from tkn