கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 15,627 ஆனது

நேற்று இருவர் மரணம், இதுவரை 47

 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 627 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் வைரஸ் தொற்று காரணமாக மேலும் இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

45 மற்றும் 54 வயதுடையவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.  கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவரும் மீகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு மரணமடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது. அதற்கிணங்க இதுவரை 47 பேர் மரணமாகியுள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றுநோயாளிகள் 10 ஆயிரத்து 653 பேர் சுகமடைந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை மேலும் 5121 பேர் பல்வேறு வைத்தியசாலைகளிலும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா வைரஸ் கொத்தணிகளிலிருந்து வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளவர்களின் தொகை 11,858 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நேற்று முன்தினம் வைரஸ் தொற்று நோயாளிகள் 5 பேரும் நேற்று இருவரும் மரணமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை