மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர் மழை பெய்து வருவதுடன், கடந்த 15 நாட்களில் இம்மாவட்டத்தில் 232.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 822.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், மாவட்ட வானிலை அவதான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்தும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான்)
Mon, 11/16/2020 - 13:14
from tkn