ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட 20 வயதான ஆடவர் கடந்த டிசம்பரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தாக்குதலை நடத்தி இருந்தார். அவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரிய தலைநகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதோடு மேலும் தாக்குதல்கள் இடம்பெறுவதை தவிர்க்கும் வகையில் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனினும் குறித்த தாக்குதல்தாரி தனிப்பட்டு செயற்பட்டிருப்பதாக நிர்வாகம் நம்புகிறது.
இந்நிலையில் துப்பாக்கிதாரியுடன் தொடர்புபட்ட 14 பேர் வியன்னா பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
from tkn