UK புலிகள் மீதான தடை : தொடருமென பிரதமர் மஹிந்த நம்பிக்ைக

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் தொடர்ந்து கடைப்பிடிக்குமென தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான பிரிட்டனின் தடை தவறானதென பிரிட்டன் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறை யீட்டு ஆணைக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதுகுறித்து நேற்று(22) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இலங்கை, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் உலகம் முழுவதும் மிகவும் சுதந்திரமாக செயற்பாட்டிலுள்ளன. அத்துடன், இது எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசாங்கம் தொடர்ந்து பராமரிக்கும் என நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை