அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் - மெஸ்சி

அனைவரும் ஒன்றிணைந்து

பார்சிலோனா அணி உரிமையாளரிடம் மோதல் போக்கை கடைபிடித்து வந்த மெஸ்சி, தற்போது அணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இளம் வயதிலிருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.

சம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா பேயர்ன் முனிச் அணக்கெதிராக 2-9 என படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்சி மீது கடும் விமர்சன்ம எழுந்தது. இந்தத் தோல்வியால் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டு புது பயிற்சியாளராக ரொனல்டு கோமென் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இளம் வீரர்களை கொண்டு புதிய அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். இவருக்கும் மெஸ்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட, மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து வெளியேற முடிவு செய்தார். பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால் இந்த வருடம் அணியில் விளையாடுவது என்பது முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையில் லூயிஸ் சுவாரஸ்-ஐ அட்லடிகோ மாட்ரிட் அணிக்கு கொடுக்க பார்சிலோனா ஒப்பந்தம் செய்தது. இது மெஸ்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பார்சிலோனா உரிமையாளரை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் தற்போது அணியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘ஏராளமான விவாதங்களுக்குப் பிறகு, அவற்றை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என கருத வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே திசையில் இழுக்க வேண்டும்.

என்னுடைய தவறுக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை