தனியார் பஸ்ஸில் திடீர் தீ விபத்து

மருதானை – சங்கராஜ மாவத்தையில் நேற்று காலை தனியார் பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு படையினர் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்ததாக கொழும்பு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தீ பரவலுக்கான காரணங்கள் இது வரை உறுதி செய்யப்படாத நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை