ரணிலிடம் வாக்குமூலம் பெறுவது ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்வதை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சுகவீனம் காரணமாக முன்னாள் பிரதமரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவரிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்வது இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க வாக்குமூலமளிப்பதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.  

இன்று (06) வாக்குமூலமளிப்பதற்காக முன்னாள் பிரதமருக்கு குறித்த ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் முன்னிலையாகியிருந்தார்.

Tue, 10/06/2020 - 13:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை